ஆந்திரா போய்விடும் என நினைத்த புயல் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில், மக்களின் வாழ்வாதாரங்களை துடைத்தெறிந்துவிட்டது. சாலையோர மரங்களிலிருந்து வீட்டின் மேல் வைத்த ப்ளாஸ்டிக் தண்ணீர் டேங் வரை காற்றில் பறந்துவிட்டபோது, குடிசை வீடுகளும், முக்கனி விளையும் மரங்களும், வயல்வெளிகளின் நெற்கதிர்களும் சாய்வது எம்மாந்திரம். ஈடுசெய்ய முடியாத இழப்பை இன்று நம் மாவட்டம் கண்டிருக்கிறது.
நெல்வயல்களுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாயும், வாழை நிலங்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாயும், கரும்புக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாயும், தென்னைக்கு ஏக்கருக்கு 10,000 யும் நிவாரணமாக வழங்க மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். முந்திரி மற்றும் பலா விளைவிக்கவே இன்னும் 7 ஆண்டுகள் ஆகும் எனும்போது அவர்களுக்கு அரசு இதைவிட பெரியதாக ஏதாவது நிவாரணம் வழங்கினால்தான் அவர்கள் வாழவே முடியும். கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து மாநில அரசும், மத்திய சர்காரும் நிதி வழங்கினால் மட்டுமே, மக்களின் வாழ்க்கை சராசரி நிலையை அடையும்.
இயற்கை நடத்திய கோரதாண்டவம் புகைபடங்களாக கடலூர்மாவட்ட செய்திகளில்
நெல்வயல்களுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாயும், வாழை நிலங்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாயும், கரும்புக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாயும், தென்னைக்கு ஏக்கருக்கு 10,000 யும் நிவாரணமாக வழங்க மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். முந்திரி மற்றும் பலா விளைவிக்கவே இன்னும் 7 ஆண்டுகள் ஆகும் எனும்போது அவர்களுக்கு அரசு இதைவிட பெரியதாக ஏதாவது நிவாரணம் வழங்கினால்தான் அவர்கள் வாழவே முடியும். கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து மாநில அரசும், மத்திய சர்காரும் நிதி வழங்கினால் மட்டுமே, மக்களின் வாழ்க்கை சராசரி நிலையை அடையும்.
இயற்கை நடத்திய கோரதாண்டவம் புகைபடங்களாக கடலூர்மாவட்ட செய்திகளில்



0 comments:
Post a Comment