பார் போற்றும் அரசன் நான், யாரும் எனக்கு நிகரில்லை-உன்
கார் மேக கூந்தலின் பரிசத்திற்கு நானே நிற்பானில்லை
அடங்கா காட்டு யானை நான், எனக்கு கடிவாளமில்லை எனினும்- உன்
ஒடுங்கிய தேகத்தின் நினைவுகள் எனை உட்கார செய்கின்றன
வெற்றி கொள்ள நான் வாளேடுத்து போருக்கு போகும்போது-உன்
நெற்றி முத்தம் என் வெற்றி திலகமாகிறது
அடைந்தால் வெற்றி இல்லை வீரமரணம் எனும்போதும்-உனை
அடைதல் எனை உயிர்பிக்க செய்கிறது
தலைகள் பல கொய்து போரில் முன்னேறி வரும் தருவாயிலும்-உன்
கலைகள் பல எனை கவிஞனாக்குகிறது
ரத்தம் சொறிந்த என் வீரவாள்-உன்னால்
நித்தம் எழுதுகோளாகிறது
சத்தம் இல்லாமல் எதிரியை எதிர்த்து முன்னேற போகும் தருவாயில்-உன்
முத்தம் ஞாபகம் வந்தது. ஆங்கே எல்லாம் முடிந்து போயிற்று
அச்சு முறிந்து என் தேர் வீழ்ந்து நானும் விழுகிறேன், இருந்தும்-உன்
உச்சந்தலை முகர்தல் எனை எழ செய்கிறது
முயற்சிகள் தோற்று, களைப்புகள் மேலோங்கும் நேரத்திலும்-உன்
கயல்விழி பார்வை எனை நிற்கசெய்கிறது.
செங்கோல் ஊன்றி மாட்சி செய்த என்னால் இன்று
செங்குத்தாய் நிற்க கூட முடியவில்லை
ஆரிய வாள்கள் என் உடலை கிழிக்கும்போதும் -உன்
கூரிய நகங்களின் கீறல்கள்தான் நினைவுக்கு வந்தது
சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்ட மன்னன்-உன்னால்
சதுரங்கத்தில் வீழ்கிறேன்
தோல்வி முகத்தை என் முகமூடியாய் மாட்டுகிறேன்-உன்
தோல் சாய்ந்து கதறி அழ நினைக்கிறேன்
என் இறக்கும் தருவாய் என்பது-உன்
பிறக்கும் தருவாயில் எழுதபட்டதாகிவிட்டது
வேட்டையாட முப்படைகள் எனை சூழ்கின்றன-உன்
அப்பழுக்கழுகில்லா முகம் கடைசியாய் நினைவுக்கு
வெற்றியை மட்டுமே பார்த்த நான் இறுதியிலும்
வெற்றியைதான் பார்க்கின்றேன் உன் முகமாய்
முன் நல்லிரவில் உயிர் காற்றில் கலக்கிறது-உனை
முன்னே வரவேற்க அது தயாராகிறது
பெரும் தோட்டமும், நீர் வீழ்ச்சியும் இங்கே எனக்கே உரித்தாவன- என்
பிறவிப் பயன் என அது எனக்கு கொணரப்பட்டது
நீ இல்லாமல் என் பிறவிப்பயன் அடைதல் ஆகாது பெண்ணே
உடன்கட்டை ஏறியாவது உடனே வா
கார் மேக கூந்தலின் பரிசத்திற்கு நானே நிற்பானில்லை
அடங்கா காட்டு யானை நான், எனக்கு கடிவாளமில்லை எனினும்- உன்
ஒடுங்கிய தேகத்தின் நினைவுகள் எனை உட்கார செய்கின்றன
வெற்றி கொள்ள நான் வாளேடுத்து போருக்கு போகும்போது-உன்
நெற்றி முத்தம் என் வெற்றி திலகமாகிறது
அடைந்தால் வெற்றி இல்லை வீரமரணம் எனும்போதும்-உனை
அடைதல் எனை உயிர்பிக்க செய்கிறது
தலைகள் பல கொய்து போரில் முன்னேறி வரும் தருவாயிலும்-உன்
கலைகள் பல எனை கவிஞனாக்குகிறது
ரத்தம் சொறிந்த என் வீரவாள்-உன்னால்
நித்தம் எழுதுகோளாகிறது
சத்தம் இல்லாமல் எதிரியை எதிர்த்து முன்னேற போகும் தருவாயில்-உன்
முத்தம் ஞாபகம் வந்தது. ஆங்கே எல்லாம் முடிந்து போயிற்று
அச்சு முறிந்து என் தேர் வீழ்ந்து நானும் விழுகிறேன், இருந்தும்-உன்
உச்சந்தலை முகர்தல் எனை எழ செய்கிறது
முயற்சிகள் தோற்று, களைப்புகள் மேலோங்கும் நேரத்திலும்-உன்
கயல்விழி பார்வை எனை நிற்கசெய்கிறது.
செங்கோல் ஊன்றி மாட்சி செய்த என்னால் இன்று
செங்குத்தாய் நிற்க கூட முடியவில்லை
ஆரிய வாள்கள் என் உடலை கிழிக்கும்போதும் -உன்
கூரிய நகங்களின் கீறல்கள்தான் நினைவுக்கு வந்தது
சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்ட மன்னன்-உன்னால்
சதுரங்கத்தில் வீழ்கிறேன்
தோல்வி முகத்தை என் முகமூடியாய் மாட்டுகிறேன்-உன்
தோல் சாய்ந்து கதறி அழ நினைக்கிறேன்
என் இறக்கும் தருவாய் என்பது-உன்
பிறக்கும் தருவாயில் எழுதபட்டதாகிவிட்டது
வேட்டையாட முப்படைகள் எனை சூழ்கின்றன-உன்
அப்பழுக்கழுகில்லா முகம் கடைசியாய் நினைவுக்கு
வெற்றியை மட்டுமே பார்த்த நான் இறுதியிலும்
வெற்றியைதான் பார்க்கின்றேன் உன் முகமாய்
முன் நல்லிரவில் உயிர் காற்றில் கலக்கிறது-உனை
முன்னே வரவேற்க அது தயாராகிறது
பெரும் தோட்டமும், நீர் வீழ்ச்சியும் இங்கே எனக்கே உரித்தாவன- என்
பிறவிப் பயன் என அது எனக்கு கொணரப்பட்டது
நீ இல்லாமல் என் பிறவிப்பயன் அடைதல் ஆகாது பெண்ணே
உடன்கட்டை ஏறியாவது உடனே வா
1 comment:
Bhai eappo irundhu idhu?Arumi appa arumi...
Post a Comment