சென்னை உணவகங்கள் - பகுதி 1

Saturday 3 December 2016  at December 03, 2016;
சில வருடங்களுக்கு முன்பு சூளைமேட்டில் அமைந்துள்ள ஒரு fastfood நிறுவனத்திற்கு நண்பர் ஒருவர் அழைத்துபோனார். அந்த பாஸ்ட்புட் கடை ஓனர் எனது நண்பருக்கு நீண்டகாலமாக தெரியும் என்பதால் வாசலுக்கே வந்து அழைத்தவர் உள்ளே உட்காருவதற்கு டேபிளையும் அடையாளம் காட்டி அமரவைத்தார். என்னடா இது வரவேற்பு தடபுடலாக இருக்கிறதே என்று வியந்துதான் போனேன். நண்பர் பெருமையாக இதை சொல்லிகொண்டார்.


என்ன ஆர்டர் வேண்டும் என்று கேட்ட முதலாளியிடம், முதலில் சிக்கன் சூப் வேண்டும் என்று சொல்லி காத்திருந்தோம். சிக்கன் சூப் ரெடி என்று சுடசுட சர்வர் எங்களுக்கு பரிமாறினார். நன்றாக கலக்கி ஒரு ஸ்பூன் எடுத்து குடித்தவுடன் எனது மூளைக்கு ஏதோ உறைத்தது. இது நார்மலான சிக்கன் சூப் இல்லையே ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று பொறிதட்டியது. உடனே எனது நண்பரை அண்ணாந்து பார்த்தேன். அவருக்கும் ஏதோ வித்தியாசம் தெரிந்திருக்கிறது போல, அவரும் என்னை பார்த்தார். சார், சூப் ஏதோ டிப்ரண்டா இருக்கே என்றேன்..அவரும் ஆமாம்பா ஏதோ வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்றார். சார், சிக்கன், மட்டன் டேஸ்ட் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும், வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிடும் ஆள் நான் அதனால் நான் உறுதியாக சொல்கிறேன் இது கெட்டுபோன சிக்கன்தான். ஆமாம்பா நானும் அப்படிதான் நினைக்கிறேன் என்றவர். இப்பொழுது என்ன செய்யலாம் என்றார்.


நாங்கள் இருவரும் சன்ன குரலில் பேசுவதை தொலைவில் இருந்து பார்த்துகொண்டிருந்த முதலாளி அதாவது நண்பரின் நண்பர், என்ன சார் ஏதாவது பிரச்சனையா என்றார். அது ஒன்னுமில்லைங்க சிக்கன் கொஞ்சம் டேஸ்ட் டிப்ரண்டாக இருக்கே என பேசிக்கொண்டிருந்தோம் என்றார். அப்படியா சார், அதுக்கு ஏன் தயக்கம், ஏன்கிட்ட சொல்லி இருகலாமில்ல என்றவர், வேற சிக்கன் சூப் சொல்றேன் என்று கடை ஊழியரிடம் வேறு சூப் கொண்டுவர சொன்னார்.


அடுத்த சூப் வந்தது. இம்முறை எச்சரிக்கை உணர்வுடன் ஸ்பூனை வாயின் அருகே கொண்டு சென்றபோது, மூக்கு அதனுடைய வேலையை செய்தது, ஆம், வாசம் நுகர்ந்தேன். ஆகா என்ன அருமையான வாசனை மூக்கை துளைக்கிறதே என்று மெல்ல குடித்தேன். அருமையப்பா அருமை. இதுவல்லவோ சூப் என்று நண்பரை அண்ணாந்து பார்தேன். அவருடைய முகத்தில் மெல்லிய சிரிப்பு.


நண்பரின் நண்பர் ஒரு ஹோட்டலின் முதலாளி அவர் தன்னுடைய நண்பருக்கே கெட்டுபோன சிக்கன் சூப் கொடுக்கிறார் என்றால் சாமானியன் நிலை என்ன என்று நினைத்தேன். ஹா, சென்னை உணவகங்கள் பற்றிய என்னுடைய அனுமானத்தில் ஒரு பெரும் கரும்புள்ளி விழுந்த தினம் அது. பச்சை மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிபோல் அது இன்றும் உணவகங்களை சந்தேகிக்கிறது. உணவகங்களின் நிலையை zomoto வில் ஆராய்கிறது. சிக்கன் ப்ரை ரைஸ் கேட்டால் சிக்கனை தவிர்த்து அதனுடைய தோலை கள்ளமாவு தடவி கறிபோல் ஆக்கி முன்கூட்டியே ப்ரை செய்து, ரைஸில் கலக்கி கொடுக்கும் கடைகளை சந்தேகிக்கிறது.


ஓகே. இதற்கு ஏன் இந்த பில்டப்பு இது நார்மலாக நடக்கும் விஷயம்தானே நீங்கள் கடந்து போவதை போல்தான் நானும் கடந்துபோனேன். ஆனால் அன்று ஆரம்பித்த விஷயம் இன்றுவரை தொடர்கிறதே என நினைக்கும்போது, சென்னை உணவகங்கள் தங்களை ஒரு முறை சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரம் இது என்று எண்ணதோன்றியது. இலைமறை காயாக இருந்த விஷயங்கள் இன்று அப்பட்டமாக நடக்கும்போது நெஞ்சு பொறுக்கதில்லையே. அதனால்தான் இந்த கட்டுரை எழுதலாம் என்று முன்வந்தேன். இதன் கட்டுரையின் முதல் பகுதி இது. ஒரு முன்னோட்டம் என்று கூட இதை நீங்கள் நினைத்து கொள்ளுங்கள். அடுத்த பகுதியில் கொஞ்சம் விலாவாரியாக அலசுவோம்.

No comments:

Post a Comment