கண்ணீர் அஞ்சலி - தியாகராஜன் சார்

Thursday 7 September 2017  at September 07, 2017;
2012 ஜனவரி மாதத்தில் மடிப்பாக்கத்தில் எனக்கொரு அடைகலத்தை கொடுத்தவர். என் மாமாவின் நெருங்கிய நண்பரின் மாமனாராக எனக்கு அறிமுகம் செய்யப்பட்டவர். தன்னுடைய மருமகனின் மீதான அன்பின் காரணமாக எனக்கு தன்னுடைய வீட்டை கம்பெனி நடத்துவதற்கு அனுமதி அளித்தார். 
அதிமுகவின் கவுன்சிலர் ஆகும் அளவுக்கு மடிப்பாக்கம் பகுதியில் பிரபலமாக இருந்தவர். இதற்கு காரணம் அவர் வியாபாத்தில் கொடி கட்டி பறந்ததாகக்கூட இருக்கலாம். இந்த பகுதியில் அதிகமான கட்டிடங்களின் மரவேலைப்பாடுகள் இவர் கைவண்ணத்தில் உருவானவையே.
கிட்டதட்ட நான்கு வருடங்கள் அவர் வீட்டை கம்பெனி நடத்துவதற்கு மற்றும் தங்குவதற்கு கொடுத்த நல்ல மனதுகாரர். நான் அவருடைய வீட்டின் கீழ்தளத்தில் இருந்தவரை அவரின் அன்புக்கு பாத்திரமாக இருந்திருக்கிறேன். எந்த விஷயம் என்றாலும் என்னுடன் பகிர்ந்துகொள்ளும் வெள்ளந்தியான மனிதர். 
மூன்றாம் முறை ஹார்ட் அட்டாக் வந்தபோது அவரை மருத்துவமனை சென்று பார்த்தேன், சென்ற வாரம் நான்காம் அட்டாக் வந்தபோது அவரை உயிரற்ற சடலமாக பார்த்தபோது என்னை அறியாமலேயே துக்கம் தொண்டையை அடைத்தது. 
அவருடைய வீட்டில் இருந்து சென்றவர்கள் மிக நன்றாக வருவார்கள் என் நன்மறாயம் சொன்னவர்.  ஏனோ கம்பெனியை அண்ணாநகருக்கு மாற்றியபிறகு அவரை தனியே சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டவே இல்லை. வழியில் செல்லும்போது ஒரு வணக்கம் வைப்பேன். புன்முறுவலுடன் ஏற்றுகொள்வார். சிறந்த பக்திமான். கொடைவள்ளல். 

காலவெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த என்னை காபந்து செய்ய கரம் நீட்டியவர். வீடுகள் மாறினாலும் சென்னையின் மடிப்பாக்கத்தை என்னின் அடையாளமாக மற்றிய கலங்கரை விளக்கம். காலம் உங்களை மறந்தாலும் நான் மறவேன்!! உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்!!!

No comments:

Post a Comment