இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sunday 31 December 2017  at December 31, 2017;

இந்தாண்டு நல்லபடியாக முடிகிறது. 2017 ஐ பொருத்தவரை இந்த ஆண்டு நிறைவான ஆண்டு,  பல குறைகளை களைந்த ஆண்டு. ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வைத்திருக்கின்ற ஆண்டு. 2018 ஐ மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நிறைய கனவுகள். நிறைய ஆசைகள். என் வாழ்வின் அடுத்த பத்தாண்டுகளை இந்த ஆண்டு தீர்மானிக்கும். ஏனெனில் சில கதவுகளின் சாவிகள், திறக்கபடவுள்ளன.

ஆண்டுகளுக்கான காலண்டரை மாற்றும்போது நமக்கும் வயதாகி கொண்டிருக்கிறது என்ற ஒரு தவிப்பு உண்டாவதை தவிர்க்கமுடியவில்லை. வயது ஏறிக்கொண்டு சென்றாலும் மனம் இன்னும் குழந்தைபோல தூகாலத்தில் இருப்பதினாலேயே
எதையும் எதிர்கொள்ளமுடிகிறது. இறைவன் அருள் நமக்கு எல்லாம் கிடைத்து இந்த 2018 ஆண்டு அனைவருடைய வாழ்வில்
மிகப்பெரிய வெற்றியை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

கடந்த ஆண்டு இந்த ப்ளாக்கை கூடுமானவரை அப்டேட் செய்ய எத்தனித்தபோதும் வேலைபளுவால் முடியவில்லை. இந்தாண்டும் இதே Resolution தான். முடிந்தவரை இந்த ப்ளாக்கரை காட்டுமன்னார்கோயில் domain வுடன் இனணக்கபார்க்கிறேன்.காட்டுமன்னார்கோயில் நண்பர்கள் நிறையபேர் இணையத்தளங்களையும், வலைப்பூவையும் அப்டேட் செய்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. காட்டுமன்னார்கோயில் இணைய நண்பர்கள் என்ற ஒரு குழுவை நாம் உருவாக்கி வருடத்தில் ஒருமுறை சந்திக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் நிரந்தரமாக சென்னையில் தங்கிவிட்டதால்
எனக்கு காட்டுமன்னார்கோயில் செய்திகள் அப்டேட் ஆவதில்லை. இருந்தும் என்னுடைய நினைவை என் ஊரை சுற்றியே இருக்கும்.

அடுத்தடுத்து வரும் அப்டேட்களில் என்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கிறேன். என்னுடைய ப்ளாக்கை தொடர்ந்து வாசித்து ஆதரவளித்துவரும் என்னுடைய நண்பர்கள், மன்னை சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்தாண்டை தொடங்குகிறேன்.

வாழ்த்துக்களுடன்,
காட்டுமன்னார்கோயில் முகமதுகாமில். தா.

No comments:

Post a Comment