காட்டுமன்னார்கோயில் செய்திகள்

Monday, 18 October 2010  at October 18, 2010;
காட்டுமன்னார்கோவில் பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு புறம் போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டியுள்ளவர்கள் பற்றி கணக்கெடுக்கும் பணிகளை துவக்கி முடிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.


காட்டுமன்னார்கோவில் பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். தாசில்தார் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ., க்கள் மற் றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

                    கூட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல இடங்களில் புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். இதில் நீர் வழி புறம் போக்கு, நத்தம் புறம் போக்கு, பொது பாதையில், நீர் வழி புறம் போக்கு உள்ளவர்களுக்கு மனைப் பட்டா வழங்க இயலாத நிலை உள் ளது. அவர்களுக்கு வேறு இடத்தில் தனியாரிடம் இடம் பெற்று கொடுப் பது. இல்லையேல் அரசு நிலம் இருந்தால் வழங்குவதற்காக கணக் கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

                    மேலும் பாதை, தரிசு நிலங்கள், களம், மந்தைவெளி போன்ற இடங்களில் உள்ளவர்களுக்கு ஆட்சேபணை இருப்பவர்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுப்பது. அல்லது அதே இடத்தில் பட்டா மாற்றம் செய்து கொடுப்பது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் புறம் போக்கு, மசூதி, சர்ச், பூங்கா, பட்டி போன்ற புறம்போக்கு இடங்களில் இருப்பவர் களுக்கு ஆட்சேபணை இருந்தால் வேறு இடத் தில் பட்டா வழங்குவது. அல்லது அரசு நிலம் இருந்தால் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மொத்த கணக்கெடுக்கும் பணியையும் உடனடியாக துவங்கி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., நடராஜன் உத்தரவிட்டார்.
 
நன்றி கடலுர் மாவட்ட செய்திகள் தளம்  www.cuddalore-news.blogspot.com

No comments:

Post a Comment